Thirukkural kadavul vazhthu | kadavul vazhthu thirukkural

திருக்குறள் கடவுள் வாழ்த்து விளக்கம் | திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம்

( thirukkural kadavul vazhthu )எல்லா மொழி எழுத்துக்களுக்கெல்லாம் அகரம்  ஒன்றே தலைமையானது . அதுபோல , உலகங்களெல்லாம் இறைவன் ஒருவனையே தலைவனாகக் கொண்டுள்ளன . அத்தகைய இறைவனை வணங்காதிருப்பாரானால் ஒருவர் கற்ற கல்வியாலாகும் பயன் ஒன்றுமில்லை ; அன்பரின் நெஞ்சத்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற இறைவன்  திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களே இன்ப  உலகத்தில் நிலைபெற்று வாழ்பவராவார் . விருப்பு வெறுப்பற்ற கடவுளின் திருவடிகளைச் சார்ந்து நினைப்பவர்ட்கு  எப்போதும் எந்த இடத்தும் துன்பம் வாராது ; இறை  வனது நிலைத்த புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாத தன்மையால் உண்டாடாகும் நல்வினை  தீவினைகள் சேர்வதில்லை .

மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக உண்டாகும் ஆசைகளை அவித்த இறை  வனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் ,  எஞ்ஞான்றும் நிலைபெற்ற நல்ல வாழ்க்கையைப் பெறுவர் . தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய திருவடிகளைச்  சார்ந்தவர்களுக்கேயன்றி , மற்றையோர்க்குத் தம் மனக்கவலையை மாற்ற முடியாது . அறக்கடலாகிய இறை  வனுடைய திருவடிகளைச் சேர்ந்தவர்க்கல்லாமல் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது .  கேட்காத காது , பார்வையிழந்த கண் முதலிய பொறி பயனில்லா தன போல இறைவன் திருவடிகளை  வணங்காத தலைகள் பயனற்றவாகும் . பிறவி யென்னும் இறைவன் திருவடிப்புணையைசி சேர்ந்தோரே  கடப்பர் , மற்றையோர்க்கு அதனைக் கடக்க முடியாது .

திரு . செ . ரெ . இராமசாமி பிள்ளை

thirukkural kadavul vazhthu | thirukkural kadavul vazhthu 10 | kadavul vazhthu lyrics in tamil | thirukkural kadavul vazhthu with meaning | kadavul vazhthu thirukkural | thirukkural first 10 | thirukkural tamil | thirukkural kadavul vazhthu in tamil

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வரதராசன் விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


சாலமன் பாப்பையா விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானம் (பகவான்) முதலாக கொண்டது இந்த உலகம் .

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


மு.வரதராசன் விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.


சாலமன் பாப்பையா விளக்கம்:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்?

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


மு.வரதராசன் விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.


சாலமன் பாப்பையா விளக்கம்:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
மலராகிய உபதேசத்தை அடைந்தவரை அடைந்தவர் நிலத்தில் நீண்ட காலம் வாழ்வார்.

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


மு.வரதராசன் விளக்கம்:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.


சாலமன் பாப்பையா விளக்கம்:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை.

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


மு.வரதராசன் விளக்கம்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.


சாலமன் பாப்பையா விளக்கம்:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
இருளாகும் இருவினைகளை சாராது இறைவனை புரிந்துகொண்டவர் புகழப்படுவது உறுதி.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


மு.வரதராசன் விளக்கம்:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


மு.வரதராசன் விளக்கம்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா விளக்கம்:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
நிகரற்றவனின் நிழல் அடைந்தாள் இன்றி மனக்கவலைகள் மாறுவது இயலாது.

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


மு.வரதராசன் விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா விளக்கம்:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம்.

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


மு.வரதராசன் விளக்கம்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா விளக்கம்:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை,என் குணம் கொண்டவனை வணக்குவதே தலை.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


மு.வரதராசன் விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா விளக்கம்:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
இறைவன் அடி சார்ந்தால் பிறவி கடலை நீந்தலாம்.இல்லையேல் நீந்தமுடியது.

learn more about

Use Search :

thirukkural kadavul vazhthu tamil , thirukkural kadavul vazhthu in tamil with meaning